Help others to know the Truth.
jaikumarads@gmail.com

Wednesday, February 5, 2020

The Holy Ash - Thiruneeru

எந்தெந்த_விரல்களால்_விபூதியை_தொடலாம்?
In which finger you can touch holy Ash (Vibhuthi/Thiruneeru)

விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும். இது குறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்.

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகிறோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மைகளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பிட்டுள்ள விரல்களில் உள்ள முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து பூச வேண்டும்.


கட்டை_விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

 Thumb finger gives Chronic illness




ஆள்_காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் பொருட்கள் நாசம்.

If you use Index finger, will lose your wealth



Image result for finger illustration"
#நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.

#மோதிர_விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் #மகிழ்ச்சியான_வாழ்க்கை.



#சுண்டு_விரலால விபூதியை தொட்டு அணிந்தால் #கிரகதோஷம் ஏற்படும்.
#மோதிர_விரலாலும், #கட்டை_விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து #மோதிர_விரலால் விபூதியை இட்டுக் கொண்டால் #உலகமே_வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
என்றும் இறைபணியில்
Share:

Ancient history about transgender

History about Transgender in Indian History

அரவாணிகளின் பிறப்பிற்கு புராண ரீதியான காரணம் உண்டா?
Ancient history about transgender in Mahabharat

Image result for mahabharat transgender"
பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்!  அரவானின் தியாகம்தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம்  என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான்.சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப்  போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார்.

பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா!  இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன்,சாமுத்திரிகா  லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான்.  சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன்  யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்;  மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது.  ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன். வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.

Image result for subhadra in mahabharat"

மேலும்  கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத்  தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும்  பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார்.  மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே  சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம்  என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம்  செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும்  வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு  நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான்.

கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும்  மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான்.

மாலை நேரம் முடிந்து
இரவு  மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி  ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை  நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச்  செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக  அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு  சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து  கொண்ட அந்த அழகி யார்? 

அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால்  ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை  நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான்.  முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப்  போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது. பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது.


Image result for கூவாகம்"
இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு  வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள்  பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.



http://www.yourastrology.co.in
Share:

Monday, March 27, 2017

How to be youth and young - Thirumoolar

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.


உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.


கடுக்காய் =  அமுதம்

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேல்" என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பு (Sour Taste) .

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.
எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். Sour taste will increase the blood cells, ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
  • கண் பார்வைக் கோளாறுகள்,
  • காது கேளாமை,
  • சுவையின்மை,
  • பித்த நோய்கள்,
  • வாய்ப்புண்,
  • நாக்குப்புண்,
  • மூக்குப்புண்,
  • தொண்டைப்புண்,
  • இரைப்பைப்புண்,
  • குடற்புண்,
  • ஆசனப்புண்,
  • அக்கி, தேமல், படை,
  • தோல் நோய்கள்,
  • உடல் உஷ்ணம்,
  • வெள்ளைப்படுதல்,
  • மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
  • மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
  • சதையடைப்பு, நீரடைப்பு,
  • பாத எரிச்சல், மூல எரிச்சல்,
  • உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
  • சர்க்கரை நோய், இதய நோய்,
  • மூட்டு வலி, உடல் பலவீனம்,
  • உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

சித்தர் பாடல்

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"
காலை வெறும் வயிற்றில் இஞ்சி-
நண்பகலில் சுக்கு-
இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

Eat ginger early in morning without having any food and have dried ginger at mid noon and Indian gall-nut at night for 48 days, you live young and youth

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.
Share:

Unknown and known facts about Pradhosha worship

Why Pradosham


சனிமஹா பிரதேஷம் அன்று சிவன் வழிபாடு செய்தால் ஒருவருடம் சிவனை வழிபாடு செய்த பலன்கிடைக்கும் . . .

*சனி மகா பிரதோஷம்*

வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் இறையுணர்வுடன் புனித நீராடி, *‘நமசிவாய’* நாமம் தொழுது, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது சிறப்பு.

அன்று மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம்தான் பிரதோஷம். அப்போது லிங்கத்தை நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும். பிரதோஷ நேரத்தில் தேவியுடன் சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் கோயிலில் மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும்.
முதல் சுற்றில் வேதபாராயணம், 2ம் சுற்றில் திருமுறை பாராயணம், 3ம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையை உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
*சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் விசேஷமானது.* சாதாரண பிரதோஷ வழிபாட்டைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது. ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு.

சித்திரை மாதம் வளர்பிறை திரயோததி திதியில் வரும் பிரதோஷ நாளே மகா பிரதோஷம். சனி பிரதோஷ தினத்தில் ஒரு கைப்பிடி காப்பரிசி(வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும், சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்பு. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

*பிரதோஷம் ஏன்?*
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் மூண்டது. இதில் இருதரப்பிலும் ஏராளமானோர் மாண்டனர். கலக்கமடைந்த தேவர்கள், இந்திரன் தலைமையில் பிரம்மனைச் சந்தித்து போருக்குத் தீர்வு காணுமாறு கூறினர். நீண்ட சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் சென்றால் கலக்கத்தைத் தீர்த்து வைப்பார் என்று தேவர்களிடம் பிரம்மன் கூறினார்.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மகாவிஷ்ணுவை சந்தித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்’ என்று வழி கூறினார் மகாவிஷ்ணு.

‘பாற்கடலை கடைவது முடியாத காரியமாயிற்றே… அதற்கான வழி என்ன’ என்று தேவர்கள் திருப்பிக்கேட்க, ‘மந்தரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி, பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடைந்தால் அமிர்தம் கிடைக்கும்’ என்று மகாவிஷ்ணு உபாயம் கூறினார்.

பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும். அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்கள் கலக்கம் நீடித்தது.
`கவலைப்படாதீர்கள். உரிய நேரத்தில் உதவுவோம்’ என்று மகா விஷ்ணு கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கியது.

மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தரகிரி மலை சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம(ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மலையை தாங்கிப்பிடித்தார். மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது. தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது.

அதே நேரம் பாற்கடலை கடைந்ததால் கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது. பாம்பின் நீல விஷமும்(காளம்), கடலின் கருப்பு விஷமும்(ஆலம்) சேர்ந்து கடும் வெப்பத்தையும், புயலையும் ஏற்படுத்தியது.
தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். தேவர்கள் அனைவரும் கைலாயம் விரைந்து, சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் கட்டளைப்படி, சுந்தரர் கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார்.

இதைப் பார்த்த தேவர்கள் அதிசயித்தனர். விஷத்தை வாங்கிய ஈசன், அதைக் குடிக்க, அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் அடைந்தார். பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார்.

விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. இதனால் அவர் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார். விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்‘ என்று அழைக்கப்பட்டார்.
சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் ஏகாதசி தினம். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது. மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலம் அவர்கள் இறவா நிலையை அடைந்தனர்.
அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர். மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் (சந்தியா நிருத்தம்) புரிந்தார். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.

ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் சனிக்கிழமை. எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

*புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்*
*பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்*
*கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்*
*வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்*
*செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்*
*எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்.*
*"திருச்சிற்றம்பலம்''*
*அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று*
*சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்*
*சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்*
*செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்*
*பல்லோரும் ஏத்தப் பணிந்து.*
*"திருச்சிற்றம்பலம்''*
Share:

Saturday, March 25, 2017

Hanuman Chalisa and Gayatri Mantra


Hanuman Chalisa and Gayatri Mantra

Yug sahastra yojan per Bhanu ...!!!
Leelyo taahi madhur phal janu ...!!!

  • 1 Yug = 12000 years
  • 1 Sahastra = 1000
  • 1 Yojan = 8 Miles
  • Yug x Sahastra x Yojan = par Bhanu
    12000 x 1000 x 8 miles = 96000000 miles
  • 1 mile = 1.6kms
  • 96000000 miles = 96000000 x 1.6kms =
    96000000 miles/1536000000 kms to SUN


NASA has Calculated the same. It is the exact distance between Earth and Sun (Bhanu)...

 Which proves GOD Hanuman did jump to Planet SUN thinking it as a sweet fruit (Madhur phal). It is really interesting how accurate and meaningful our ancient scriptures are.

The GAYATRI MANTRA the most powerful hymn in the world

Dr.Howard Steingeril, an American scientist collected Mantras Hymns and invocations from all over the world and tested for their strength in his Physiology Laboratory ...

Gayatri Mantra produced 110,000 sound waves /second

This was the highest and was found to be the most powerful hymn in the world.
Through the combination of sound or sound waves of a particular frequency, this Mantra is claimed to be capable of developing specific spiritual potentialities.

The Hamburg university initiated research in to the efficacy of the Gayatri Mantra both on the mental and physical plane of CREATION ...

The GAYATRI MANTRA is broadcasted daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.

Om Bhoor Bhuwah Swah ... Tat Savitur Varenyam ... Bhargo Devasya Dheemahi, Dhiyo Yo Nah Pra-chodayaat ...

"It's meaning

GOD is dear to me like my own breath… He is the dispeller of my pains … and giver of happiness … I meditate on the supremely adorable Light of the Divine Creator… that it may inspire my thought and understanding."

The above information is worth circulating and sharing with one and all ...!!!
Share:

Monday, March 20, 2017

Human life cycle - Pattinathar


Unknown facts and Known facts Human life - Pattinathar



வாழ்க்கைச்சக்கரம்

The most brilliant explanation on Human life, genius Pattinathar explained whole life cycle in 11th Century 


ஒரு மடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊருசுரோணிதம் மீதுகலந்து

பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைககள் என்ற

உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்விழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து

மகளிர் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீரறி வாகிவளர்ந்து-

ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைமொழிந்து
வாயஇருபோவென நாமம்விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடியபாலரொ டோடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே

உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின் கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து

மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க

மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சூழிய எறிந்து
மாமயில் போல் அவர் போவதுகண்டு

மனது பெறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி

ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
வாலிபகொலமும் வேறு பிரிந்து

வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்விழுந்து இரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவிராத குரோதம் அடைந்து
செங்கையினில் ஓர் தடியும் ஆகியே

வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து

துயில் வரும்நேரம் இருமல் பெறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுனையும் அழிந்து
தோகையர் பாளர்கள் கோரணி கொண்டு

கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து
கால்வலி மேல்வழி சாரநடந்து

தெளிவும் இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து

மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனிஎன தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற

கடன் முறை பேசும் என உறைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று
நெஞ்சுதடுமாரி வரும்நேரமே

வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து

வலைகொடுவீ சி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து

பழையவர்காணும் எனுமயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று

பலரையும் ஏவி முதியவர் தரமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை

வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளைமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வென நொந்து

விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீரும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே!

Share:

Monday, March 13, 2017

images




Share:

Ads

Learn more

Unknown Hinduism/ Known Hinduism

Support

Follow This

Search This Blog